breakfastlunchdinner

பந்தியிலிட்டவை!

Thursday, June 25, 2009

ஆந்திரா துவையல் வகைகள்

ஆந்திராவில் ஊறுகாய்க்கு அடுத்து சமையலில்
முக்கிய இடம்பெறுவது பச்சடி என அழைக்கப்படும்
துவையல்.

வெள்ளரிக்காய், கறிவேப்பிலை, கொத்துமல்லி,
தேங்காய், பீர்க்கங்காய் தோல், சொள சொள தோல்
என பல வகை துவையல்கள். மேற் சொன்ன எல்லாவற்றிற்கும்
வறுத்துக்கொள்ளும் அயிட்டம் மட்டும் ஒன்று தான்.


INGREDIENTS பட்டியல்: தனியா - 1 ஸ்புன், மி.வற்றல் - தேவையான அளவு, வெந்தயம் 1/2ஸ்பூன், புளி சிறிதளவு, உப்பு தேவையான அளவு

செய்முறை:

பட்டியலில் உள்ள சாமான்களில் புளியைத் தவிர
மற்றவற்றை வாணலியில் எண்ணெய்
1 ஸ்புன் ஊற்றி பொன்னிறத்தில் வறுத்துக்கொள்ளவும்.

கறிவேப்பிலை, கொத்துமல்லி மட்டும் அந்த வாணலியில்
கொஞ்சம் பிரட்டிக்கொண்டால் 1 வாரம் வரைக் கெடாது.


மாங்காய் பச்சடி:

பட்டியலில் இருக்கும் சாமான்களில் புளி மட்டும் வேண்டாம்.

மாங்காயை கழுவி துண்டுகளாக்கிக்கொள்ளவும்.

மிக்ஸியில் வறுத்து வைத்திருக்கும் சாமான்களை பொடியாக்கிக்கொண்டு
மாங்காய் துண்டுகளைப்போட்டு அதிகம் மைய்ய அரைக்காமல்
படத்தில் இருப்பது போல் அரைத்தால் துவையல் ரெடி.

உப்பு,புளி,காரச்சுவையுடம் மாங்காய்த் துவையல்.
சோற்றில் பிசைந்து கொள்ளலாம். இட்லி,தோசை,
சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷும் ஆச்சு.

ஃப்ரிட்ஜில் 1 வாரம் வரை வைக்கலாம்.



Thursday, April 23, 2009

தோசாவக்காய...

என்னது தோசையில் ஆவக்காயான்னு குழம்பாதீங்க.
மஞ்சள் வெள்ளரிக்காயில் போடும் ஊறுகாய் இது.
(ஆந்திரா ஷ்பெஷல்னு சொல்லணுமா!!!))


மாங்காய் ஆவக்காயை விட வேலையும் குறைவு,
ஒரே நாளில் உபயோகிக்கவும் துவங்கலாம்.
அதான் இந்த ஊறுகாயின் ஷ்பெஷாலிட்டி.

செய்வது எப்படின்னு பாப்போம். தேவையான
பொருட்கள் இதோ:



INGREDIENTS பட்டியல் மஞ்சள் வெள்ளரிக்காய் -1, நல்லெண்ணெய் 1 கப், அதே கப்பில் அளந்த மிளகாய்த்தூள் 1 கப், 1 கப் உப்பு, கடுகுபொடி 1 கப்






மஞ்சள் வெள்ளரிக்காயில் விதையை எடுத்துவிட்டு
படத்தில் காட்டியிருப்பது போல் வெட்டி வைத்துக்கொள்ளவும்.





வெள்ளரிக்காய் துண்டங்களுடன் உப்பு,காரம், கடுகு பொடி,
எண்ணெய் எல்லாம் சேர்த்து கலக்கி பாட்டில் போட்டு வைக்கவும்.



அடுத்த நாள் ஊறுகாய் ரெடி. சுடு சோற்றில் ஊறுகாய் போட்டு
நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்......... :)))



கடுகு பொடி கிடைக்கவில்லை என்றால் கடுகை மிக்சியில்
சுற்றி நாமே பொடி செய்து கொள்ளலாம்.

(ஆந்திரா ஷ்பெஷல் உணவுகள் இந்த ப்ளாக்கில்
தொடரும் :)) )

Thursday, April 2, 2009

ராகி சங்கட்டி


INGREDIENTS பட்டியல் ராகி(கேப்பை மாவு) 1 கப், சமைத்த சோறு - 1 கப், உப்பு தேவையான அளவு, நெய் - 1 ஸ்பூன்.



செய்முறை:

கொஞ்சம் குழைவாக சமைத்த சோற்றில் தேவையான அளவு
உப்பு், 1 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

1 கப் ராகிக்கு 3 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து
கரைத்து வைக்கவும்.

அடுப்பை பற்றவைத்து, அடி கனமான பாத்திரம் வைத்து
அதில் கரைத்து வைத்திருக்கும் சோற்றை போட்டு கிளறவும்,
கொஞ்சம் கொதிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் கரைத்து
வைத்திருக்கும் கேப்பை மாவையும் ஊற்றி கைவிடாமல்
கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது நெய்
சேர்த்து மேலும் கிளறி இறக்கினால் சங்கட்டி ரெடி.

இதற்கு சரியான ஜோடி பூண்டுக்குழம்பு அல்லது வடைகறி.


கேப்பை உடலுக்கு மிகவும் நல்லது. குளிர்ச்சி தரும்.

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இவ்வுணவு மிக
உதவும்.


1.சமைத்த சோறு இல்லாவிட்டால் அரிசியை
மிக்சியில் போட்டு உடைத்து(அரிசி உப்புமா
செய்யும் பதம்) சோறு சமைத்து சேர்க்கலாம்.

Monday, February 23, 2009

மசாலா டீ

INGREDIENTS பட்டியல்














வட இந்தியாவில் மசாலா டீ மிக பிரபலம்.

தென்னிந்தியாவிலும் இஞ்சி டீ, ஏலக்காய் டீ
தயாரிப்போம். இங்கே ஹைதைராபாத்தில் இரானிடீ
மிகப் பிரபலம்.

எனக்கு கடையில் வாங்கி மசாலா சேர்ப்பது
பிடிக்காது. நான் வீட்டிலேயே மசாலா செய்து
வைத்துக்கொள்வேன். அந்த செய்முறையை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தேவையான சாமானகளின் புகைப்படம் மேலே இருக்கிறது.

ஏலம், லவங்கம், மிளகு இவை சமமாக 1 கப் (தனித் தனியாக)
பட்டை 1, ஜாதிக்காய் 1(தோல் நீக்கி கொஞ்சம் தட்டிக்கொள்ளவும்)
சுக்குபொடி - 2 அல்லது 3 ஸ்பூன்.

ஒவ்வொரு சாமானையும் மைக்ரோ அவன் பாத்திரத்தில்
போட்டு மூடி 1 நிமிடம் வைத்து எடுத்து வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் இட்டு பொடித்து காற்றுப்புகாத
டப்பாவில் வைத்துக்கொண்டால் மசாலா டீ தயாரிக்கும்
பொழுது உபயோகிக்கலாம்.

மசாலா டீ செய்முறை:

டீக்கு தண்ணீர் வைக்கும் பொழுது டீத் தூளை
போடும் முன்னர் தேவையான அளவு (1/2 ஸ்பூன் 4 பேருக்கு)
மசாலா தூள் போட்டு கொதித்ததும் டீத் தூளை
போட்டு பிறகு பால், சர்க்கரை சேர்த்து
வடிகட்டினால் மசாலா டீ ரெடி.






Wednesday, October 1, 2008

மைக்ரோ அவனில் காபி

மைக்ரோ அவனில் காபி சூடு செய்தால் சுவையா
இருக்குமா என்று முத்துலெட்சுமி கேட்டிருந்தார்.
அவருக்காக இந்தப் பதிவு.

மைக்ரோ அவனில் காபி கலந்தால் அதன்
சுவையே வேறு. நல்ல மணமாகவும் இருக்கும்.


ஃபில்டர் காபி என்ற பதிவுக்கு.


இன்ஸ்டண்ட் காபி பொடியில் காபி கலக்க:

முதலில் தேவையான பொடியை போட்டு
1/4 கப் தண்ணீர் சேர்த்து கலந்து
அவனில் 40 செகண்ட்ஸ்
வைக்கவும்.

பிறகு சர்க்கரை, பால் சேர்த்து கலந்து
மேலும் 20 நொடிகள்
வைக்கவும்.

1 நிமிடத்தில் காபி ரெடி. வெளியே
எடுக்கும் போதே வாசனை ஊரைக்கூட்டும்.



டிகாஷனில் காபி மைக்ரோ அவனில்.

டிகாஷன், சர்க்கரை, பால் இவைகளை கப்பில்
ஊற்றி கலந்து 1 நிமிடம் வைத்து எடுத்தால்
சுடச்சுட காபி ரெடி.

(முன்பே சொல்லியிருப்பது போல் திரவ பதார்த்தங்களை
வெளியே எடுக்கும் போது முகத்தை அருகில் கொண்டு
செல்லாதீர்கள்)

மைக்ரோ அவனில் சாம்பார்

மைக்ரோ அவனில் சாம்பார் செய்தால் சுவையும்
ருசியும் சூப்பராக இருக்கும்.


பருப்பை அவனில் வைத்தால் குறைந்தது 20 நிமிடம்
ஆகும். கரண்ட் வேஸ்ட். குக்கரில் வேகவைத்துக்
கொள்ளவும்.

எலுமிச்சை அளவு புளி 2 டம்பளர் நீரில் ஊற வைத்து
கறைத்து வைத்துக்கொள்ளவும்.

சாம்பார் பொடி 1 1/2 ஸ்பூன்.

உப்பு தேவையான அளவு.

கறிவேப்பிலை - 1 ஈர்க்கு

ந.எ. 1 ஸ்பூன் (தாளிக்க)

வெங்காயம் - 1 நீள் வாக்கில் அரிந்தது.


a href="http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/SON6wohL9CI/AAAAAAAABI4/HuVVrMBeC8A/s1600-h/sambhar.bmp">

செய்முறை:

மைக்ரோ அவன் பாத்திரத்தில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு
போட்டு மூடி 2 நிமிடம் வைக்கவும்.

தாளித்து முடிந்ததும் வெளியே எடுத்து
கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து
பிரட்டி 3 நிமிடம் வைக்கவும்.

வெளியே எடுத்து உடன் சாம்பார் பொடி,
உப்பு சேர்த்து பிரட்டவும்.

கரைத்து வைத்திருக்கும் புளித்தண்ணீர்
சேர்த்து அவனில் 5 நிமிடம் வைக்கவும்.

5 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து
வேக வைத்திருக்கும் பருப்பை சேர்த்து
மேலும் 3 நிமிடம் வைத்து எடுக்கவும்.

சுவை, மணம் மிக்க சாம்பார் ரெடி.

காய் சேர்க்க விரும்பினால்:

தேவையான காய்களை 1 ஸ்பூன்
தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கொஞ்சம் உப்பு
சேர்த்து பிசிறி 2 நிமிடம் வைக்கவும்.

சாம்பாருக்கு பருப்பு சேர்க்கும் பொழுது
வேகவைத்து வைத்திருக்கும் காய்கறியையும்
சேர்த்து கலக்கி வைத்தால் போதும்.

Thursday, September 25, 2008

மைக்ரோ அவனில் வெங்காயச் சட்னி.



இட்லி,தோசைக்கு இணையான ஜோடி தக்காளி
வெங்காயச் சட்னிதான். தேங்காய்ச் சட்னியுடன்
ஒப்பிடும் பொழுது இதில் கொழுப்புச் சத்து குறைவு.
இதனாலேயெ டயட்டில் இருப்பவர்களும் இதை
விரும்புகிறார்கள்.


காலை அவசரத்தில் தக்காளி, வெங்காயம்
வதக்கிக்கொண்டு இருக்க நேரம் இருக்காது.
அப்போது மைக்ரோ அவனில் செய்வேன்.
அதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


INGREDIENTS பட்டியல் பெரிய வெங்காயம் - 2 ( நீளவாக்கிலோ, பொடியாகவோ அரிந்து கொள்ளவும்), தக்காளி - 1, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - 1/2 ஸ்பூன்,


மேற்சொன்னவை எல்லாவற்றையும் கலந்து
மைக்ரோ அவன் பாத்திரத்தில் போட்டு 5 நிமிடங்கள்
வைத்தால் நன்கு வதங்கிவிடும். நடுவில் ஒரு
முறை வெளியே எடுத்து திருப்பி விடவும்.
சூடு ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் அடித்தால்
சட்னி ரெடி.

உளுத்தம் பருப்பு சேர்த்து செய்யும் சட்னிக்கு கூட
முதலில் எண்ணெய் விட்டு அதில் உ.பருப்பு சேர்த்து
2 நிமிடம் வைக்கவும். பிறகு தக்காளி வெங்காயம்,
மிளகாய் சேர்த்து மேலும் 4 நிமிடங்கள் வைத்து
ஆறியதும் அரைக்கலாம்.

சுலபாமனது. செய்து பார்த்து சொல்லுங்கள்>
Google