breakfastlunchdinner

Thursday, September 20, 2007

காரக்குழம்பு

தேவை:

கடுகு: 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள்: அரை ஸ்பூன்
வெந்தயம்: 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள்:100கி
புளி: எலுமிச்சை அளவு
எண்ணெய் :100மிலி
உப்பு: தேவைக்கு...

செய்முறை:

முதலில் மூன்று டம்ளர் தண்ணீரில் புளியை ஊறவைக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சுட்டதும் பெருங்காயத்தூளைப் போட வேண்டும். வெந்தயம் போட்டு லேசாய் வறுத்து, கடுகைப் போட்டு வெடிக்க விட வேண்டும். புளித்தண்ணீரை விட்டு அது சுட்டதும் மிளகாய் தூள் போட்டு கிளற வேண்டும். உப்புப் போட்டுக் கலந்து கொதி வந்ததும், கூடவே மணம் வந்ததும் இறக்கி விடலாம்.

குறிப்பு: இந்தக் காரக் குழம்பை மாதத்துக்கு இருமுறை அல்லது ஒருமுறை செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். உலகளாவ பரந்து கிடக்கும் சாப்ட்வேர் பிரம்மச்சாரிகள், பேச்சிலர்கள் இந்தக் குழம்பை செய்து மகிழலாம். பச்சரிசி புழுங்கலரிசி சாதங்களுக்கு நல்லாவே சேரும்.

துணைக்குறிப்பு: கடலை மடித்த காகிதமொன்றில் கிடைத்த குறிப்பு இது. எந்தப் பத்திரிகைக் காகிதம் என்று அறிய இயலவில்லை. மேலே உள்ள குறிப்பும் அதில் உள்ளதுதான்.
Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines