அரிசிமாவு-100g
கடலைமாவு-100g
மைதாமாவு-100g
பெரியவெங்காயம்-2
கறிவேப்பிலை-2 கொத்து
வேர்க்கடலை-100g
மிளகாய்த்தூள்-2 கரண்டி
பெருங்காயத்தூள்-அரை கரண்டி
உப்பு-தேவைக்கேற்ப
எண்ணெய்-பொரிப்பதற்கு
செய்முறை
மாவு வகைகளை நன்கு கலந்து கொள்ளவும். வெங்காயத்தை காரட் துருவியில் துருவிக்கொள்ளவும். கறிவேப்பிலையை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வேர்க்கடலையை மிக்சியில் ஒரு அடி மட்டும் அடித்து சிதைத்துக் கொள்ளவும். (பொடிந்து மாவாகிவிடக்கூடாது) எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து சிறிது நீர்விட்டு பிசைந்து கொள்ளவும். சிறிய வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
கதிர்வடை தயார். தனியாகவும் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் விட்டு சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு சுவை பற்றி கூறவும்.
எண்ணெய் பலகாரம் சாப்பிடுவது தீமை என்று சொல்லி விட்டு எண்ணெய்ப் பலகாரம் செய்வதையே போட்டிருப்பதற்கான தர்ம அடிகள் வருவதற்குள் எஸ்கேப்....