breakfastlunchdinner

Sunday, August 31, 2008

மைக்ரோ வேவ் சமையல்



மைக்ரோ வேவில் சமைப்பது சுலபம்.
( மைக்ரோ வேவ் பாத்திரம் தேய்ப்பதும் தான் :))))

மைக்ரோ வேவ்
விக்கிப்பீடியா தகவல்களுக்கு.

மைக்ரோ வேவ் எப்படி வேலை செய்கிறது?
போன்ற மற்ற தகவல்களுக்கு.

மைக்ரோ வேவில் சூட வைப்பது மட்டுமல்ல
சூப்பரா நமது இந்திய சமையலும் செய்யலாம்.
(துளசி டீச்சர் பதிவுகளில் பார்த்திருப்பீங்க)

எனக்குத் தெரிந்த சில மைக்ரோ வேவ்
சமையல் குறிப்புகளை உங்களுக்குத்
தரப்போகிறேன்.

இனிப்போடு ஆரம்பிக்கலாமா?

தேங்காய் பர்பி:


INGREDIENTS பட்டியல் தேங்காயத் துருவல் - 1 கப், சர்க்கரை - 1 கப், நெய் 1 ஸ்பூன், ஏலப்பொடி கொஞ்சம்.





மைக்ரோ வேவ் பாத்திரத்தில் தேங்காய்த் துருவல்,
சர்க்கரை, நெய் கலந்து 3 நிமிடம் வைக்கவும்.

3 நிமிடத்திற்கு பிறகு எடுத்து கொஞ்சம் ஏலப்பொடி
சேர்த்து கலக்கி மேலும் 3 நிமிடங்கள் வைக்கவும்.

எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள்
போட்டால் பர்பி ரெடி.

( வைக்கும் நேரம் அவனின் அளவைப் பொறுத்தும்
வாட்ஸைப் பொறுத்தும் மாறும் )






Saturday, August 9, 2008

தவல அடை

பேரைப் பார்த்து பயந்து விடாதீர்கள். இது சைவ உணவுதான்.
வைகை எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்யும் பொழுது
விற்றுக்கொண்டு வருவார்களே சாப்பிட்டிருக்கிறீர்களா?


மழை பெய்துகொண்டிருக்கிறது. இந்த டிபன் சூப்பரா இருக்கும்.

இதை இரண்டு விதமாக செய்யலாம்.

INGREDIENTS தேவையான பொருட்கள்:

அரிசி : 2 கப்

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு,
உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு எல்லாம் கலந்து :2 கப்

சீரகம், மிளகு 1 ஸ்பூன். மிளகாய் வற்றல் : 5

பட்டியல்


மேற்சொன்ன அனைத்தையும் ஊற வைத்து கரகரவென்
அரைத்து எண்ணையில் கரண்டியால் எடுத்து ஊற்றி
ப்ரவுன் நிறத்தில் பொறித்து எடுக்கலாம்.

எண்ணையில் பொறிக்க பயமாக இருக்கும்
கலோரி கான்சியஸ் காரர்கள் இவ்வாறு செய்யலாம்.

கொடுத்திருக்கும் பொருட்களை மிக்ஸியில்
டிரையாக ரவைபோல் பொடித்துக் கொள்ளவும்.

அடி கணமான பாத்திரத்தில் எண்ணைய் ஊற்றி
கடுகு, கறிவேப்பிலை தாளித்து 1 பங்கு ரவைக்கு
2 பங்கு தண்ணீர் விட்டு கொதித்ததும் உப்பு
சேர்த்து, பொடித்து வைத்திருக்கும் ரவையையும்
சேர்த்து உப்புமாவாக கிளறவும்.10 நிமிடம்
சிம்மில் வைத்து வெந்ததும் அடுப்பை அணைத்து
விடவும்.

செய்து வைத்திருக்கும் உப்புமாவை உருண்டைகளாக
செய்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து உருட்டி வைத்திருக்கும்
உருண்டைகளை வட்டமாகத்தட்டி, நடுவில் ஓட்டை
செய்து அதை வாணலியில் போட்டு, 1 ஸ்பூன்
எண்ணைய் எடுத்து நடுவில் கொஞ்சம், சுற்றி
கொஞ்சம் விட்டு மூடி வைக்கவும்.

பிறகு மறுபுறமும் திருப்பி மூடி வைக்கவும்.
சுட்டதும் சுடச்சுட சாப்பிடலாம்.

தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி, கொத்சு
சாம்பார் எதுவும் ஓகே தான்.

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines