மைக்ரோ அவனில் சாம்பார் செய்தால் சுவையும்
ருசியும் சூப்பராக இருக்கும்.
பருப்பை அவனில் வைத்தால் குறைந்தது 20 நிமிடம்
ஆகும். கரண்ட் வேஸ்ட். குக்கரில் வேகவைத்துக்
கொள்ளவும்.
எலுமிச்சை அளவு புளி 2 டம்பளர் நீரில் ஊற வைத்து
கறைத்து வைத்துக்கொள்ளவும்.
சாம்பார் பொடி 1 1/2 ஸ்பூன்.
உப்பு தேவையான அளவு.
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
ந.எ. 1 ஸ்பூன் (தாளிக்க)
வெங்காயம் - 1 நீள் வாக்கில் அரிந்தது.
a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_T6bXrLLd-NOJnr9Alxv6G7F7TriuRl9hVYGnKcjtYyKth_vvPmEn2VWBEWgfmCebwD892v8d0l7yVZJYpdBPg1e1KYBoOneD4T8EvdNB9qi8T74S0lz9lAakUqsNB-TeK379X4Rc2F8/s1600-h/sambhar.bmp">

செய்முறை:
மைக்ரோ அவன் பாத்திரத்தில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு
போட்டு மூடி 2 நிமிடம் வைக்கவும்.
தாளித்து முடிந்ததும் வெளியே எடுத்து
கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து
பிரட்டி 3 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து உடன் சாம்பார் பொடி,
உப்பு சேர்த்து பிரட்டவும்.
கரைத்து வைத்திருக்கும் புளித்தண்ணீர்
சேர்த்து அவனில் 5 நிமிடம் வைக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து
வேக வைத்திருக்கும் பருப்பை சேர்த்து
மேலும் 3 நிமிடம் வைத்து எடுக்கவும்.
சுவை, மணம் மிக்க சாம்பார் ரெடி.
காய் சேர்க்க விரும்பினால்:
தேவையான காய்களை 1 ஸ்பூன்
தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கொஞ்சம் உப்பு
சேர்த்து பிசிறி 2 நிமிடம் வைக்கவும்.
சாம்பாருக்கு பருப்பு சேர்க்கும் பொழுது
வேகவைத்து வைத்திருக்கும் காய்கறியையும்
சேர்த்து கலக்கி வைத்தால் போதும்.