INGREDIENTS பட்டியல் உரித்த பூண்டு - 300 கிராம், மிளகாய்த்தூள் - 3/4 கப், உப்பு - 1/2 கப் எலுமிச்சை ரசம் - 1 கப் எண்ணெய் - 1 கப் பெருங்காயம் - கொஞ்சமாக கடுகு - 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் - சிட்டிகை. வறுத்து பொடிக்க: வெந்தயம் - 1/2 ஸ்பூன், சீரகம் - 1/2 ஸ்பூன், தனியா - 1/2 ஸ்பூன், |
செய்முறை பாப்போம்:
வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, சீரகம்,
வெந்தயம் தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் கொஞ்சம்
நர நரவென பொடித்துக்கொள்ளவும்.
பூண்டை தண்ணீர் விடாமல் குக்கரில் வைத்து ஸ்டீம் செய்து
எடுக்கவும். தண்ணீர் விடாமல் ரெண்டு விசில் விட்டால் கூட
போதும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு
சேர்த்து வெடித்ததும் பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
உடன் பூண்டு சேர்த்து நன்கு கலந்ததும், காரத்தூள், உப்பு,
பொடித்து வைத்திருக்கும் பொடி சேர்த்து உடன் அடுப்பை
அணைத்துவிடவும். நன்கு கிளறிவிட்டு எலுமிச்சை ரசத்தை
ஊற்றி கிளறவும். முதலில் மிக கெட்டியா இருக்கும். கொஞ்ச
நேரத்தில் எண்ணெய் பிரிந்து வந்து விடும்.
சுவையான, பூண்டு ஊறுகாய் ரெடி. காற்று புகாத பாட்டிலில்
போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். 3 மாதம் வரை கெடாது.
ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை.
4 comments:
பூண்டு ஊறுகாய் ஆந்திர ஸ்டைலில்! பார்க்கவே ஆசையாயிருக்கு! செய்து விடுகிறேன். பகிர்வுக்கு நன்றிங்க.
தென்றல், படிக்கவே நன்றாக இருக்கு. ஊருக்குச் சென்றதும்
செய்து பார்க்கிறேன்.
இப்பொழுதே தயிர் சாதம் தட்டில் எடுக்க வேண்டும்போலிருக்கிறது...மணி 9 .30தானே ஆகிறது...
அளவுகள், கப் என்பதை விட கிராமில் கூறினால் இன்னும் சுலபமாக இருக்குமே...
Post a Comment